×

காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: 2009 பேட்ஜ் காவலர்கள் வழங்கினர்

 

விருதுநகர், மே 6: சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 2009 பேட்ஜ் காவலர்கள் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினர். விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைய காவலராக வேலை பார்த்து வந்தவர் கார்த்திகேயன். வேலை நிமித்தமாக கடந்த ஆண்டு அக்.16ம் தேதி இரவு சூலக்கரை காவல் நிலையத்தில் இருந்து ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு பைக்கில் சென்றார்.நான்குவழிச் சாலையில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக அங்கு நின்றிருந்த லாரியில் பைக் மோதி உயிரிழந்தார்.

இவரது குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், அவருடன் 2009 பேட்ஜில் தேர்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் பணியில் உள்ள 4,724 காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.25.16லட்சம் நிதி அளித்தனர்.அதிலிருந்து கார்த்திகேயனின் 10வயது மகள் பெயரில் ரூ.12.53 லட்சம், 4வயது மகன் பெயரில் ரூ.12.47 லட்சம், மனைவியின் பெயரில் ரூ.15,674 மற்றும் காப்பீட்டு தொகை என ரூ.25.16 லட்சத்திற்கான காசோலையை விருதுநகர் சூலக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்த்திகேயன் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

The post காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: 2009 பேட்ஜ் காவலர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Karthikeyan ,Vachakarapatti ,station ,Dinakaran ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு